வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் -12.03..2024
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2024பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 21 கல்லூரிகளை சேர்ந்த சுமார் 10, 300 மாணவ ,மாணவிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப.,அவர்கள் ஒரே நேரத்தில் காணொளிக்காட்சி வாயிலாக வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உரையாடினார்..(PDF 33KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 11.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2024தோல் நோயால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத நிலையில், கோரிக்கை மனு கொடுத்த சிறுமிக்கு 30 நிமிடத்திற்குள் துரித நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ,ஆ.ப., அவர்கள் அடையாள அட்டையினை வழங்கினார்..(PDF 33KB)
மேலும் பலவி.களத்தூர் ராயப்பன் நகர் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 10.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2024வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் ராயப்பன் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ,ஆ.ப, அவர்கள் வீதி வீதியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் 40 பயனாளிகளுக்கு ரூ.52.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2024செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த மாபெரும் புகைப்படக் கண்காட்சியினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டு 40 பயனாளிகளுக்கு ரூ.52.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 33KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் ரூ.3.04 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் – 08.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2024மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.04 கோடி மதிப்பிலான பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பேருந்து சேவையினையும் தொடங்கி வைத்தார்.(PDF 33KB)
மேலும் பலகுன்னம் பகுதியில் புதிய பேருந்து பணிமனை – 07.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2024மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்ததன் அடிப்படையில், குன்னம் பகுதியில் புதிய பேருந்து பணிமனை அமையவுள்ள இடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)
மேலும் பலதுறைமங்கலம் பெரிய ஏரி மேம்படுத்தும் பணி – 06.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/03/2024துறைமங்கலம் பெரிய ஏரி மேம்படுத்தும் பணியினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 33KB)
மேலும் பல”நீங்கள் நலமா” திட்டம் – 06.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/03/2024மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று தொடங்கி வைக்கப்பட்ட ”நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தின் மூலம் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பயனாளிகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அரசுத்திட்டங்களின் பயன்பாடு மற்றும் கருத்துகளை கேட்டறிந்தார்.(PDF 33KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் ரூ.23.54 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 06.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/03/2024மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.23.54 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை 4,572 பயனாளிகளுக்கு வழங்கினார் (PDF 33KB)
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு – 05.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/03/2024பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர்/ தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அனில் மேஷ்ராம்,இ.ஆ.ப.., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 33KB)
மேலும் பல