Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

10வது பெரம்பலூர் புத்தகத் திருவிழா நிறைவு விழா – 08.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள திடலில் 27.02.2026 அன்று கோலாகலமாகத் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற 10வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் விழா இன்று (08.03.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

சட்டமன்ற தேர்தல் 2026 – கண்காணிப்பு குழு அலுவலர்களுக்கு பயிற்சி – 07.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026

சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room), பறக்கும் படை (FST), நிலையான கண்காணிப்புக் குழு (SST), வீடியோ கண்காணிப்புக் குழு (VST) மற்றும் வீடியோ பார்வையிடும் குழுக்களில் (VVT) நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு – 06.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ.31.75 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த விழுதுகள் சேவை மையத்தினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் இன்று (06.03.2026) திறந்து வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

“கனவுகள் மெய்ப்படும்” நிகழ்ச்சி – 06.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை வர்த்தக மையத்தில், இன்று (06.03.2026) “உங்கள் கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இந்த நிகழ்ச்சியினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தலைமயில், காணொளிக்காட்சி வாயிலாக நேரலையில் பார்வையிட்டு, பெரம்பலூர் மாவட்டத்திற்கான விஷன் 2030 மற்றும் ஐந்தாண்டு சாதனை திட்டங்கள் […]

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாராட்டினார் – 05.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/03/2026

மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.(PDF 38KB)

மேலும் பல

பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 05.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/03/2026

பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு(PDF 38KB)

மேலும் பல

பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தால் அழிக்கப்பட்டன – 04.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 05/03/2026

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 1,069 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, கூலிப் உள்ளிட்ட பொருட்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.கோ.சி.அனிதா ஆகியோர் முன்னிலையில் ஆழக்குழிதோண்டி கொட்டி எரித்து அழிக்கப்பட்டது.(PDF 38KB)

மேலும் பல

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துணை சுகாதார நிலையத்தினை திறந்து வைத்தார் – 04.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 05/03/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் விலங்குகள் கருத்தடை மையத்தினையும் மற்றும் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் துணை சுகாதார நிலையத்தினையும் திறந்து வைத்தார்கள்.அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் புதிய கட்டடங்களை பார்வையிட்டார்.(PDF 38KB)

மேலும் பல

திறனகம் – சிறப்பு மாவட்ட திறன் மையங்கள் – 03.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 04/03/2026

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு வழங்கும் வகையில் மாநிலம் முழுவதும் “திறனகம்” எனும் சிறப்பு மையங்களை திறந்து வைத்தார்கள்.அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனகத்தை பார்வையிட்டார்.(PDF 38KB)

மேலும் பல

சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் – 02.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 04/03/2026

சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)

மேலும் பல