Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

உங்க கனவ சொல்லுங்க திட்டம் – 09.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026

உங்க கனவ சொல்லுங்க எனும் புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்தார் – அதனை நேரலையில் பார்வையிட்டு மகளிர் சுயஉதவிக்குழு தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டைகளையும், படிவங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் ஆகியோர் வழங்கினார்கள்.(PDF 38KB)

மேலும் பல

அந்தூர் வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 08 .01.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அந்தூரில் வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி – 08 .01.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரூ.3000/- ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 2 நாள் சுற்றுலா – 08 .01.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, பள்ளிக் கல்வித் துறை இணைந்து, அரசு பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி என 50 மாணவர்கள் 2 நாள் சுற்றுலாவிற்காக திருச்சி செல்ல உள்ள போருந்துக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந. மிருணாளினி இ.ஆப., அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்கள்.(PDF 38KB)

மேலும் பல

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் – 07.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

கலைஞர் கைவினைத் திட்டம் – 07.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கலைஞர் கைவினைத் திட்ட சாதனையாளர்களின் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இருந்து நேரலையில் பார்வையிட்டு, தொழில் தொடங்குவதற்காக பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான ஆணையினை வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ஆய்வு செய்தார் – 07.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொளக்காநத்தம் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பணி முன்னேற்ற நிலை குறித்து மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மற்றும் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் ஆய்வு செய்தனர்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வருவாய்துறை அலுவலர்களுக்கு புதிய வாகனங்களை வழங்கினர் – 06.01.2025

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வருவாய்துறை துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக அரசால் வழங்கப்பட்ட 04 புதிய வாகனங்களை சம்பந்தப்படட அலுவலர்களிடம் வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

மத்திய பொறுப்பு அலுவலர் தலைமையில் ஆய்வு கூட்டம் – 06.01.2025

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026

ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை அரசு துணைச் செயலாளர் திருமதி.லலிதாம்பிகை, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் “முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள்“ (FOCUS BLOCKS) திட்டத்தின் கீழ், மாவட்ட மற்றும் வட்டார நிலை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார் – 04.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்களை வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் / பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் திருமதி எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல