பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தால் அழிக்கப்பட்டன – 04.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2026மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 1,069 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, கூலிப் உள்ளிட்ட பொருட்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.கோ.சி.அனிதா ஆகியோர் முன்னிலையில் ஆழக்குழிதோண்டி கொட்டி எரித்து அழிக்கப்பட்டது.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துணை சுகாதார நிலையத்தினை திறந்து வைத்தார் – 04.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் விலங்குகள் கருத்தடை மையத்தினையும் மற்றும் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் துணை சுகாதார நிலையத்தினையும் திறந்து வைத்தார்கள்.அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் புதிய கட்டடங்களை பார்வையிட்டார்.(PDF 38KB)
மேலும் பலதிறனகம் – சிறப்பு மாவட்ட திறன் மையங்கள் – 03.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2026மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு வழங்கும் வகையில் மாநிலம் முழுவதும் “திறனகம்” எனும் சிறப்பு மையங்களை திறந்து வைத்தார்கள்.அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனகத்தை பார்வையிட்டார்.(PDF 38KB)
மேலும் பலசட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் – 02.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2026சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)
மேலும் பல2024–2025 மணிமேகலை விருது – 02.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 04/03/20262024-25 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகைளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 02.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2026மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலகள்ளப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது-28.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026கள்ளப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பல10வது பெரம்பலூர் புத்தகத் திருவிழா – 27.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள திடலில் 10வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் ஆகியோர் இன்று (27.02.2026) தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.(PDF 38KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல17 மாணவர்களுக்கு கல்விக் கடன் ஆணைகள் வழங்கப்பட்டது – 27.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026அனைத்து வங்கியாளர்களுக்கான கூட்டத்தில் 17 மாணவர்களுக்கு ரூ.67.18 லட்சம் கல்வி கடன்களுக்கான ஆணைகளை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பல