மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் காலண்டுக்கூட்டம் – 20.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2025மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் காலண்டுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலதீவன புல் நறுக்கும் கருவிகளை 40 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் – 20.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2025கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு ரூ.11.60 லட்சம் மதிப்பிலான தீவன புல் நறுக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப.., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை – 19.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயிற்சி பெறலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 19.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலமுத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர் – 17.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்., இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வேப்பந்தட்டை ஆய்வாளர் அலுவலகத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் – 18.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வாலிகண்டபுரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேப்பந்தட்டை ஆய்வாளர் அலுவலகத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆய்வாளர் அலுவலகத்தில் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் – 18.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் குழுவின் தலைவரும், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது..(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் தொடங்கி வைத்தார் – 18.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.11.88 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.(PDF 38KB)
மேலும் பலசிற்றுந்து சேவைகளை மாண்புமிகு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 17.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்திற்கான சிற்றுந்து சேவைகளை மாண்புமிகு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.ராசா அவர்கள்,மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 16.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல