Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் ஜமாலியா நகர் பகுதியில் 277 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார் – 16.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/02/2026

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஜமாலியா நகர் பகுதியில் வசித்து வரும் மக்களின் சுமார் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மூன்றாம் கட்டமாக 277 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொளக்காநத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் – 16.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/02/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக, ரூ.18.10 கோடி மதிப்பீட்டில் கொளக்காநத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடங்களை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் இந்நிகழ்ச்சியினை நேரலையில் பார்வையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்(PDF 38KB)

மேலும் பல

அரசலூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.-15.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2026

அரசலூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப ., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் தேர்வான முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் – 14.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2026

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட கலந்தாய்வு மூலம் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு தேர்வானவர்கள் மற்றும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி-12.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2026

பெரம்பலூர் மாவட்டம் -குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்து – வீடு வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் ஒட்டினார்.(PDF 38KB)

மேலும் பல

“என் ஊரு என் கனவு” திட்டம் -12.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2026

பெரம்பலூர்மாவட்டம் -“என் ஊரு என் கனவு” திட்டத்தின் மூலம் 2030ஆம் ஆண்டிற்குள் பெரம்பலூர் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே கருத்து கேட்கும் நிகழ்ச்சி மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 38KB)

மேலும் பல

பெரம்பலூர் மாவட்டத்தில் 21,173 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை -12.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2026

பெரம்பலூர் மாவட்டம்-மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிற்கே முன்னோடி முதலமைச்சராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திகழ்கின்றார் – கடந்த 5 ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் 21,173 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது – மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெருமிதம்.(PDF 38KB)

மேலும் பல

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூரில் வழிதட நீட்டிப்பு செய்யப்பட்ட பேருந்து சேவைகளை தொடங்கிவைத்தார் – 11.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2026

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வழிதட நீட்டிப்பு செய்யப்பட்ட பேருந்து சேவைகளை தொடங்கிவைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் ரூ.6.54 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் – 11.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2026

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.6.54 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளை தொடங்கிவைத்தார்.(PDF 38KB)

மேலும் பல