மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக நல கல்லூரி மாணவியர் விடுதியினை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார் – 27.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக, பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமூக நல கல்லூரி மாணவியர் விடுதியினை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்து, ரூ.6.05கோடி மதிப்பில் கீழக்கணவாய் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டப்படவுள்ள சமூக நல விடுதிக்கு அடிக்கல் நாட்டினார் அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள், வேப்பூர் அரசு மகளிர் கல்லூரி சமூக நல கல்லூரி மாணவியர் […]
மேலும் பலமழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு – 27.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காணொளி ஒளிபரப்பும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் புதிய வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார் – 26.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தில் ரூ..5.74 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார்(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் புதிய BS VI ரக நகரப் பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் – 26.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் 4 வழித்தடங்களுக்கான 6 புதிய BS VI ரக நகரப் பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் புதிய பால் குளிரூட்டும் மையத்தை திறந்து வைத்தார் – 26.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் குன்னத்தில் 15,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, ரூ.66.14 லட்சம் மதிப்பிலான புதிய பால் குளிரூட்டும் மையத்தை திறந்து வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் புதிய மின்பகிர்மான கோட்டத்தை திறந்து வைத்தார் – 26.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் குன்னத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மின்பகிர்மான கோட்டத்தையும், செயற்பொறியாளர் அலுவலகத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இஆ.ப., அவர்கள் தலைமையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான விழிப்புணர்வு பேரணி – 25.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தில் “புதிய உணர்வு – மாற்றத்திற்கான முன்முயற்சி 4.0 என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலதமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் சிறப்பு குழு ஆய்வுக் கூட்டம் – 24.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் சிறப்பு குழு ஆய்வுக் கூட்டம் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எஸ்.இனிகோ இருதயராஜ் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலவாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – 24.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். (PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/11/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல