மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ஆய்வு செய்தார் – 07.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொளக்காநத்தம் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பணி முன்னேற்ற நிலை குறித்து மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மற்றும் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் ஆய்வு செய்தனர்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வருவாய்துறை அலுவலர்களுக்கு புதிய வாகனங்களை வழங்கினர் – 06.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வருவாய்துறை துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக அரசால் வழங்கப்பட்ட 04 புதிய வாகனங்களை சம்பந்தப்படட அலுவலர்களிடம் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமத்திய பொறுப்பு அலுவலர் தலைமையில் ஆய்வு கூட்டம் – 06.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை அரசு துணைச் செயலாளர் திருமதி.லலிதாம்பிகை, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் “முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள்“ (FOCUS BLOCKS) திட்டத்தின் கீழ், மாவட்ட மற்றும் வட்டார நிலை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலவாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார் – 04.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்களை வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் / பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் திருமதி எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலஅரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் – 03.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலவாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 02.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலபொது சுகாதாரத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் – 02.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026பெரம்பலூர் மாவட்டம் பொது சுகாதாரத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலபாடாலூரில் அமைக்கப்பட்டு வரும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 02.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026பாடாலூரில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலகுழந்தை திருமண தடுப்பு குழு உறுப்பினர்களுடனான கலந்தாய்வு கூட்டம் – 01.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026மாவட்ட மற்றும் வட்டார அளவிலான குழந்தை திருமண தடுப்பு குழு உறுப்பினர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் – 31.12..2025
வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் திருமதி எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல